Thursday, June 26, 2008

தோழனே....!!!!

தோழனே....!!!! நீ எனக்கு நண்பனாக கிடைக்க
நான் ஏது தவம் செய்தேனோ?
கலகலவென நகைக்கும் வயதில்
சலனமில்லாமல் இவ்வளவு சோகமா?


உனக்குள் இருக்கும் சோகத்தை
எனக்குள் இன்றே புதைத்துவிட்டு
கள்ளமின்றிச் சிரித்திட உல்லாச
வானில் பறந்திடு


உன் இலட்சியங்களை நிறைவேற்ற
என்றும் உனக்கு துணையாவேன்
இன்றே விரைந்து புறப்படு
நன்றே நடக்கும் உன்வாழ்வில்


பழையனவற்றை மறந்திடு புதியதை
தேடி விரைந்திடு சோகத்தை தூக்கி
எறிந்திடு தோழா என்
தோளில் தலை சாய்த்திடு


ஆயிரம் உறவுகள் தோன்றியும்
அன்பில்லையே என சலிக்காதே
நட்பைவிட வேறேது இன்பம்
நானிருப்பேன் கலங்காதே

முதற்பதிவு

தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு என் வணக்கங்கள்... இன்று முதல் என் பதிவு வலையேறுகிறது.... நல்ல சில பதிவுகள் இனி என் வலைப்பக்கங்களில் வலையேறும் நன்றி அன்புடன் கஜன்